Thursday 27 September 2012

7ம் அறிவு போல் தகவல்களை DNAவில் சேமித்து தருவிக்கும் முறை...


தகவல்களை ஒரு இடத்தில் சேமிக்கும் முறை சந்திக்கும் ஒரே சவால். சேமிக்கப்பட்ட தகவல் எவ்வளவு காலம் வரை அழியாது இருக்கும்.  அதன் கொள்ளளவு எவ்வளவு.
ஒரு காலத்தில் நாமெல்லாம் ஒரு Floppy Disk ஐ வைத்துக் கொண்டு சில JPEG / PDF கோப்புகளை பரிமாறிக் கொள்வோம். பின்னர், CD, DVD, Flash Drive, Blu-Ray..
கல்வெட்டும், ஓலைச் சுவடியும் கொண்டு எழுதிய சிந்தனை தான் இன்று நீண்ட கால தகவல் சேமிப்பு பற்றிய எண்ணங்களைத் தூண்டியுள்ளன.
நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம், கரப்பான் பூச்சியில் தகவல்களை சேமித்து வைத்தால் அணு ஆயுதப் போரே வந்தாலும் அதன் உடலில் சேமித்த தகவல்கள் அழியாது. எதிர்கால சந்ததியினர்
ஏதேனும் ஒரு கரப்பான் பூச்சியைப் பிடித்து தகவல்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஆன்மீகத்திலும் சித்தா முறைகளிலும் சொல்லப் பட்ட DNA மூலமாக தகவல்களை செவ்வனே சேமித்து பின் தருவித்துக் கொள்ளலாம் எனும் முறையை சோதனை முயற்சியாக புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 53,426 வார்த்தைகளைக் கொண்ட புத்தகத்தை DNA மூலக் கூறு ஒன்றில் பதிந்துள்ளனர்.
நாம் நமது தாத்தா போல் கோவப்படுவதும் , தோற்ற ஒற்றுமைகளும் நமது DNA வில் உள்ள தகவல்களால் தான்., இதை முருகதாஸ் நம்மிடம் 100  ரூபாய் கட்டணம் வாங்கி சொல்லிக் கொடுத்தார்.
இந்த அறிவியாளர்கள் 11 படங்கள் மற்றும் ஒரு Javascript நிரலையும் உள்ளடக்கிய இந்த புத்தகத்தை இரும மதிப்புகலாக(0 & 1 Binaries) மாற்றி ஒவ்வொரு nucleobase எனும் DNAவில் உள்ள சிறிய அறையுள் சேமித்தார்கள். 1 எனும் இரும மதிப்பை சேமிக்க 96 base long (இலக்கம் எனவும் கொள்ளலாம்) தேவைப்பட்டது. இவ்வாறாக முழு புத்தகத்தையும் சேமிக்க 52,70,00௦ இலக்கங்கள் தேவைப்பட்டது.  ஒரு DNAவின் மொத்த கொள்ளளவு என்பதை ஒரு சிறு மண் துகள் எனக் கொண்டால், சேமிக்கப் பயன்படுத்திய இடம் அந்த மண் துகளில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி என அறிவித்துள்ளனர்.
இதில் சேமிக்கப்பட்ட தகவல்களை படிப்பது எளிது. இரும எண்களை ஆங்கில எழுத்துகலாக மாற்றி படித்துவிடலாம்.
DNAவில் ஒருமுறை எழுதி விட்டால் மறுபடியும் எழுத இயலாது. இந்த தகவல்கள் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். எதிர்கால சந்ததியினரால் எப்போதும் அவரின் சிந்தனை DNA தகவல் சேமிப்பு பற்றி தோன்றி, கண்டிப்பாக நாம் இப்போது பதியும் தகவல்களை அவர்களால் படிக்க முடியும்.
இந்த தொழில் நுட்பம் எதற்கெல்லாம் பயனாய் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

Monday 24 September 2012

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?



 ஆன்ட்ராய்ட் மொபைல்களின் சிறப்புகளில் ஒன்று இதற்கென அதிகமான அப்ளிகேசன்களும், விளையாட்டுக்களும் உள்ளது தான். கடந்த மார்ச் மாதம் வரை நாலரை லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமானவைகள் இலவசமாக கிடைக்கின்றன.

இலவசங்கள்  எதுவும் இலவசம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா இலவசங்களுக்கும் நாம் மறைமுகமாக ஏதோவொரு விலை கொடுக்கிறோம். இலவச ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களிலும் அப்படித்தான். 

கடந்த அக்டோபர் 2011-வரை கிட்டத்தட்ட 37 சதவீத அப்ளிகேசன்களை ஆன்ட்ராய்ட் மார்க்கெட்டிலிருந்து (Google Play) பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நீக்கியுள்ளது. அதில் 70 சதவீதம் இலவச அப்ளிகேசன்களாகும். நீக்கப்பட்டதில் அதிகமானது மால்வேர் அப்ளிகேசன்களாகும்.

பொதுவாக ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும்போது சில அனுமதிகள் (Permissions) கேட்கும். அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் அவைகளை நிறுவ முடியும்.


ஆன்ட்ராய்டில் மொத்தம் 22 விதமான அனுமதிகள் இருக்கின்றன. அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும் முன் அந்த அனுமதிகளை படிப்பது அவசியமாகும். முக்கியமான சில அனுமதிகள்,

  • Services that cost you money – make phone calls [உங்கள் மொபைலில் இருந்து மற்றவர்களுக்கு கால் செய்வதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.]
  • Services that cost you money - send SMS or MMS [உங்கள் மொபைலில் இருந்து எஸ்.எம்.எஸ், எம்.எஸ்.எஸ் ஆகியவைகளை அனுப்புவதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.]
  • Storage - modify/delete SD card contents [உங்கள் மெமரி கார்டில் சேமித்து வைக்கவும், அதில் உள்ளவற்றை மாற்றம் செய்வதற்கு, நீக்குவதற்குமான அனுமதி.]
 இறைவன் நாடினால் அனைத்து அனுமதிகளைப் பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.

அப்ளிகேசன்களை நிறுவும் முன் அவைகள் கேட்கும் அனுமதி அவசியமானதா? என்பதை பாருங்கள். Photography தொடர்பான அப்ளிகேசன்Storage அனுமதியை கேட்கும். ஆனால் அதுவே Phone Call செய்வதற்கான அனுமதியை கேட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

சில அப்ளிகேசன்களை நிறுவுவதற்கு எந்த அனுமதியையும் கேட்காது. "This application requires no special permissions to run." என்று சொல்லும். ஆனால் அது போன்ற அப்ளிகேசன்களாலும் மால்வேர்களை நிறுவி நமது தகவல்களை எடுக்க முடியும் என்று தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?


தீங்கு விளைவிக்கும் அப்ளிகேசன்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சிறந்த வழி, அந்த அப்ளிகேசன்/கேம் பற்றி அதை பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை "User Reviews" பகுதியில் படிப்பதாகும். அதை படித்தல் ஓரளவு நாம் தெரிந்துக் கொள்ளலாம். Rating-ஐ மட்டும் பார்க்க வேண்டாம். கருத்துக்களையும் படியுங்கள்.

முடிந்தவரை அப்ளிகேசன்/கேம்களை Google Play-வில் இருந்து மட்டுமே நிறுவுங்கள். தற்போது  போலியான Angry Birds Space கேம் மற்ற தளங்களில் பரவி வருகிறது. இது Trojan Virus-ஐ நிறுவிவிடும்.

கவர்ச்சியான, ஆபாசமான அப்ளிகேசன்/கேம்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவைகள் தான் அதிகம் மால்வேர்களை பரப்புகிறது.

நீங்கள்  பார்க்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் நிறுவ வேண்டாம். 

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?




தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.

ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.

ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.

இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:


சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.

ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:


1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படிWidget-களை வைத்துக் கொள்ளலாம்.

2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும்.  உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

மேலும்  பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்கவிக்கிபீடியாவில் பார்க்கவும்.

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

Android Market:

ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி தனிப பதிவில் பார்ப்போம்.

Saturday 22 September 2012

உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!

நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராகஇருந்தால்,உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.


நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில்
யார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)மொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.

இந்த தளத்தில் பதிவு செய்யவும் முதலில் .

http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp


அதில் பெயர், மின்னஞ்சல் , உங்கள் மொபைல் எண் போன்றவற்றை தந்தால்
உங்கள் கைபேசிக்கு ஒரு குறுந்தகவலில் 4 இலக்க சங்கேதே எண் அனுப்பப்படும்.



way2sms கணக்கில் 
4 இலக்க சங்கேதே எண் கொடுத்து உள்ளே சென்றால் புதிய
password கேட்கும். அதைக்கொடுத்துவிட்டு Mail என்ற tab - ஐத்தேர்வு செய்தால்
ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு உருவாக்க பயனர் சொல் கேட்கும் .

உதாரணம் : example@way2sms.com
நீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms கணக்கு உருவாக்கப்படும்.

GMail
Gmail பயனராய் இருந்தால் உங்கள் gmail அமைப்புகள் செல்லவும் . அதில்
Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy of incoming mail என்பதில்
தெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே
keep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து சேமித்தால் போதும்.


Yahoo.co.in
உங்கள் yahoo கணக்கில் சென்று options-> Mail options செல்லவும்.
அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding --> Set up or Edit Pop & Forwarding தேர்வு
செய்யவும்.

Forward பகுதியில் உங்கள் way2sms முகவரியைத்தரவும். சேமிக்கவும்.

பின்னர் Way2sms கணக்கில் நுழைந்து Settings பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்யவும்.
Mobile preference பகுதியில் Alert me whenever கொடுங்கள்.
Time settings - ல் All 7 days & Round the clock கொடுங்கள். சேமியுங்கள்.

இனிமேல் உங்கள் gmail மற்றும் yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள்
உங்கள் கைபேசியில் அறிவிப்பாய் வந்து சேரும்.

குறிப்பு:

1.இது yahoo.co.in மற்றும் gmail க்கு மட்டுமே பொருந்தும்.
2.இது ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லும். மறுபடியும் நீங்கள் உங்கள்
way2sms கணக்கில் நுழைந்து புதுபிக்கவேண்டும்.(Renew)
3.இதில் நீங்கள் இலவசமாக குறுந்தவகலும் (sms) அனுப்பலாம் இந்தியாவிற்குள்.
4.இங்கிருந்தே நீங்கள் உரையாடவும் முடியும் (Chatting)

கணினியில் உட்காரும் போது சில யோசனைகள்

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை
கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி
உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய
ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்
ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்
சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்





தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்












இந்த நோய் வராமல் தடுப்பதற்கான பயிற்சிகள்:





இதைப்பற்றிய சில காணொளிகள்:

http://www.youtube.com/watch?v=XCcplgeQzrU

http://www.youtube.com/watch?v=ஹுய்ம்ன்ய்ரோத்ஜ்

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்...

நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து
எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,
WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3
போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்.


இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேமித்துக்கொள்ளலாம்.

முக்கிய விஷயம் என்ன என்றால் வீடியோவில் இருக்கும் படம் அல்லது பாடலின் தரம் நீங்கள் மாற்றிய பின்னும் ஒரே வகையில் இருக்கும். இதன் தரவிறக்க அளவு 3.8 MB மட்டுமே.நன்றி.

தரவிறக்கச்சுட்டி : http://www.aoamedia.com/audioextractor.exe

கூகுள் புதிதாக வழங்கியுள்​ள Google Maps Photo Tour வசதி....


இணையத்துடன் தொடர்புடைய பல்வேறுபட்ட புதிய அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்திவரும் கூகுள் தற்போது தனது Google Mapsல் Photo Tour எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தியுள்ள Google Maps Photo Tour வசதியில் உலகெங்கிலும் காணப்படும் பிரபல்யமான இடங்களின் 15,000 வரையிலான படங்கள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன.
இதனை பயனர்களின் முப்பரிமாண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும் Picasa, Panaromio அனுபவங்களை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் விசேட தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணணியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்கு....


கணணியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் இனம் கண்டுவிட முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணணியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை இனம்கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும்.
ஆனால் சிலருக்கு இவ்வாறான Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால் அவற்றை நிறுத்துவதற்கு யோசிப்பார்கள். அவ்வாறானவர்கள் Run command விண்டோவை ஓப்பின் செய்து அதனுள் Regedit என டைப் செய்து Regedit விண்டோவை ஓப்பின் செய்ய வேண்டும்.
தொடர்ந்து தோன்றும் விண்டோவில் HKEY_CURRENT_USER Control Pannel Sound எனக் காணப்படும் போல்டரை திறந்து அதனுள் காணப்படும் Beep என்பதில் இரட்டைக் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் valeஐ No என மாற்றி OK செய்யவும். இதன் பிறகு கணிணியில் ஏற்படும் Beep Sound நின்றுவிடும்.

புகைப்படங்களை எளிதாக வீடியோவாக மாற்ற PhotoFilmStrip...


நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள். 

பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று தான் PhotoFilmStrip. எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும். முதலில் இதனைத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். New Project மெனுவில் சென்று உங்களுக்குத் தேவையான புகைப்படங்களைச் சேர்க்கவும். இதில் ஒளிப்படங்களை அது இருக்கும் இடத்திலிருந்தே இழுத்து விட்டால் கூட போதுமானது. (Drag and Drop)

சேர்க்கப்பட்ட ஒவ்வொரு ஒளிப்படங்களும் வரிசையாக கீழ்புறத்தில் தோன்றும். அதைக் கிளிக்கினால் பெரிதாக மேலே தோன்றும். படத்தில் தேவையில்லாத பகுதிகளை வெட்டிக் கொள்ள முடியும். (Crop Pictures) . ஒவ்வொரு ஒளிப்படமும் எந்த எபெக்டில் தோன்ற வேண்டும் என்று அமைத்துக் கொள்ளலாம். பிண்ணணியில் எதாவது பாடல் ஓட வேண்டுமெனில் சேர்க்கலாம். Subtitle என்பதில் அந்த ஒளிப்படத்தைப் பற்றிய குறிப்பைக் கொடுத்தால் வீடியோவின் அடியில் தோன்றும். உருவாக்கப்படும் வீடியோ எவ்வளவு நேரம் ஒடும் என்பதை மென்பொருளின் Status Bar இல் தெரியும்.

இறுதியில் வீடியோ வகைகளான FLV, Mp4, Avi போன்றவற்றில் தேர்வு செய்யலாம். மேலும் Full HD , VCD, Pal, NTSC போன்ற டிவிடி கோடக் (Codecs) வசதியின் மூலம் வீடியோ தரத்தை அமைக்கலாம். உங்கள் புகைப்படங்களின் அளவு, கணிணியின் வேகம் போன்றவற்றைப் பொறுத்து சில நிமிடங்களில் வீடியோ உருவாக்கப்படும்.

தரவிறக்கச்சுட்டி : Download PhotoFimStrip

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!...


விஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.

இதற்கு கணிணியில் புதிய பதிப்பான VLC 2.0 நிறுவியிருக்க வேண்டும். இல்லாதவர்கள் கீழுள்ள சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.


VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும். அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும்.
வெட்டப்பட்ட வீடியோ Mp4 பார்மேட்டில் My Documents->My Videos போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விடVLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம்.

Friday 21 September 2012

ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?...


Block unwanted mails in gmail
தற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.

மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர். ஜிமெயில் கணக்கில் (Gmail Account ) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.

1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஒரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால் Settings -> Filters செல்லவும்.

Block unwanted mails in gmailBlock unwanted mails in gmail
2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும்.குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க“@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும்.

Block unwanted mails in gmailஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களைத்தடுக்க ஒவ்வொன்றுக்கும் இடையில் | குறியீடைக்கொடுக்கவும்.
(எ.கா) mail1@example.com | mail2@example.com

3. பின்னர் Next step என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக்குறிப்பிட வேண்டும்.

Block unwanted mails in gmail
இதில் Delete it என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஒரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.

4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம்; அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the inbox( Archive it) என்பதை தேர்வு செய்து Apply the label பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பப்பட்டிருக்கும்.

Block unwanted mails in gmail
5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய
“ | “ குறியீடைக்கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து
தடை செய்யலாம்.....