Monday 27 January 2014

ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்.பெண்களே உஷார்!

பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்!



**********************
முடிந்தவரை அத்தனை பெண்களுக்கும் தெரியப்படுத்துங்கள்; Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் மதிவெறி(போதை) ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்; இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம்; பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்; அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல் போய்விடுமாம்; தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆகநேரிடுமாம்; மேலும் பல பக்கவிளைவுகள் உண்டு என்கின்றனர்; இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன; அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில் கிடைக்கக்கூடியது; எனவே, பெண்களே, நீங்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்லநேரலாம்; அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்துவிடலாம், மூடிய புட்டிகளிலும் ஊசியால் செலுத்தப்பட்டிருக்கலாம்; சுவையும் இருக்காது; எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள்....

Sunday 26 January 2014

'ரோமிங்'கை இலவசமாக்க பி.எஸ்.என்.எல். திட்டம்



புதுடில்லி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மொபைல் போன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், நாளை முதல், ரோமிங்கை இலவசமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொபைல் போன் சேவை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களான, எம்.டி.என்.எல்., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள், ஒரு வட்டத்தில் இருந்து மற்றொரு வட்டத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு, ரோமிங் கட்டணம் வசூலிக்கிறது. இதை இலவசமாக்கும்படி, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர், கபில் சிபல், கடந்த நவம்பர் மாதம், இரு நிறுவனங்களையும் கேட்டு இருந்தார்.பல தனியார், டெலிகாம் ஆபரேட்டர்கள், ரோமிங்கில் இருக்கும் போது, உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை என்று அறிவித்ததன. மேலும் வெளி செல்லும் அழைப்புகளுக்கு குறைந்த கட்டணத்தில் சலுகை அறிவிப்பை வெளியிட்டன.

இந்நிலையில், டில்லி மற்றும் மும்பையில் சேவையாற்றி வரும், எம்.டி.என்.எல்., நாளை முதல் ரோமிங்கை இலவசமாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, மும்பையில் இருக்கும் வாடிக்கையாளர், டில்லி சென்றால், ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. இதே போல் நாடு முழுவதும், சேவை நடத்தி வரும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ரோமிங்கை இலவசமாக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், ரோமிங்கில் இருக்கும் போது, வெளிசெல்லும் அழைப்புகளுக்கு, உள்ளூர் கட்டணத்தை நிர்ணயிப்பது பற்றி யோசித்து வருகிறது அல்லது மாதம், தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'டிராய்' என்ற தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கணக்கின்படி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, 9.78 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள், உள்ளனர். இதில், எம்.டி.என்.எல்., லுக்கு, 35.75 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்...

Wednesday 22 January 2014

ஆன்லைனில் பாஸ்போர்ட்டு அப்ளை செய்வது எப்படி..?

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க...!


முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்.https://passport.gov.in/pms/Information.jspContinue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்.

Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்) 
First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும் Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும் Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY) Place of Birth: பிறந்த ஊர் District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும் Qualification: உங்களது படிப்பு Profession: தொழில் Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை) Height (cms): உயரம் Present Address: தற்போதைய முகவரி Permanent Address: நிரந்தர முகவரி Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை Phone No: தொலைபேசி எண் Mobile No : மொபையில் எண் Email Address: இமெயில் முகவரி Marital Status: திருமணமான தகவல் Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர் Father’s Name: தந்தை பெயர் Mother’s Name: தாயார் பெயர் தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும் உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண் Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள் Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம் File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்) Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள் [] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும் அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம். முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு) · ரேசன் கார்டு · குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · வாக்காளர் அடையாள அட்டை · வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) · துணைவின் பாஸ்போர்ட் பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_ · 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ் · பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் · கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும் வேறு சான்றிதல்கள் · 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும் · உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ். · பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்…

Monday 20 January 2014

சம்பள விஷயத்தில் அஜித் செய்யும் ‘வெள்ளை’ப்புரட்சி…!

கரன்ஸி வேண்டாம், காசோலை கொடுங்க..!

சம்பள விஷயத்தில் அஜித் செய்யும் ‘வெள்ளை’ப்புரட்சி…! 





எல்லாவற்றிலுமே அஜித் வித்தியாசமானவர்தான்….! மற்ற நடிகர்கள் செய்யும் எதையும் இவர் செய்ய மாட்டார். இவர் செய்வதை மற்றவர்கள் செய்யவே முடியாது.

உதாரணத்துக்கு ‘சால்ட் பெப்பர்’ என்கிற நரைமுடியுடன் நடிப்பது. முக்கால் கிழமாகிவிட்ட நடிகர்கள் தொடங்கி, முழுக்கிழவர்களாகவே இருக்கும் நடிகர்கள்வரை தலைமுடிக்கு கருப்புசாயம் பூசிக்கொண்டு, பேத்தி வயசு நடிகைகளுடன் காதல் பாடலுக்கு ஆடிக்கொண்டிருக்க… அஜித் மட்டுமே தன் வயசுக்கேத்த உண்மைத்தோற்றத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், இல்லை…இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே எந்த நடிகரும் செய்யாத விஷயங்களைச் செய்து வரும் அஜித், சம்பளம் வாங்குவதிலும் சத்தமில்லாமல் மிகப்பெரிய புரட்சியையே செய்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியாத விஷயம். என்ன புரட்சி? கள்ளக்காதலுக்கும், கருப்புப் பணத்துக்கும் பேர் போன இடம் திரைப்படத்துறைதான். இங்கே நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளத்தில் சொற்பத்தொகையை மட்டுமே கணக்கில் காட்டுகிறார்கள்.

முக்கால்வாசித் தொகையை ரொக்கமாக வாங்கிக் கொண்டு, அதை கணக்கில் காட்டாமல் அமுக்கிவிடுகிறார்கள். 2000 ஆம் ஆண்டில் ‘வானத்தைப்போல’ படத்தில் நடித்தபோது விஜயகாந்துக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி. ஆனால் அவர் கணக்கில் காட்டியதோ வெறும் 24 லட்சம்தான். விஜயகாந்தைப்போலவே, அப்போதும், இப்போதும், திரைப்படத்துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அத்தனை பேருமே இப்படித்தான் உண்மையான சம்பளத்தை கணக்கில் காட்டாமல் ‘கள்ளக் கணக்கு’ காட்டுகிறார்கள்.

இந்த விஷயத்தில் அஜித் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்…! பல வருடங்களாகவே இவர் சம்பளமாக ரொக்கப்பணத்தை வாங்குவதே இல்லை. தன் சம்பளத்தை காசோலையாக மட்டுமே பெறுகிறார். இப்படி வாங்குவதன் மூலம் மொத்த சம்பளத்தையும் வங்கிக்கணக்கில் வரும்படி செய்து, அதற்கு நியாயமான வருமான வரியையும் கட்டி வருகிறார். அஜித்தின் இந்த செயல் அவரது போட்டியாளர்களாக இருக்கும் மற்ற ஹீரோக்களை ஏகத்துக்கும் எரிச்சல்படுத்தி இருக்கிறது.

இவர்கள் ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? தற்போது 25 கோடி சம்பளம் வாங்கும் அஜித், அதை அப்படியே கணக்கில் காட்டும்போது, வருமான வரித்துறையினருக்கு ஒரு விஷயம் புரியும். இவர் 25 கோடி என்றால் விஜய் 20 கோடி, சூர்யா 22 கோடி என்று மற்ற ஹீரோக்களின் சம்பளத்தை எளிதில் யூகித்துவிடுவார்கள். அதற்கு குறைவான தொகையை மற்ற ஹீரோக்கள் கணக்கில் காட்டினால் வருமானவரித்துறையினர் நம்ப மாட்டார்கள். இதை எல்லாம் எண்ணித்தான் எரிச்சல்…!

நல்லவனாகவும் இருக்க மாட்டாங்க..! நல்லவனாகவும் இருக்க விட மாட்டாங்க..

How to UNLOCK USB dongle Internet Modem and swap another service sim card

டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக் இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி?




நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.

Friday 17 January 2014

HOW TO KNOW ADMIN PASSWORD THROUGH GUEST ACCOUNT...?



1) Go to C:/windows/system32.
2) Copy cmd.exe and paste it on desktop.
3) Rename cmd.exe to sethc.exe.

4) Copy the new sethc.exe to system 32,when windows asks for overwriting the file,then click yes.
5) Now Log out from your guest account and at the user select window,press shift key 5 times.
6) Instead of Sticky Key confirmation dialog,command prompt with full administrator privileges will open.
7) Now type “ NET USER ADMINISTRATOR “zzz” where “zzz” can be any password you like and press enter.
8) You will see “ The Command completed successfully” and then exit the command prompt and login into administrator with your new password.
9) Bravo !! Now You have hacked admin through guest account.

Thursday 16 January 2014

கவிப்பேரரசை ஈர்த்த ஈஷா !



கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சமீபத்தில் ஈஷா யோகா மையம் வந்திருந்தபோது, அங்கே தான் கண்ட இயற்கைச் சூழலையும் அனுபவித்த அற்புத உணர்வையும் தனக்கே உரிய கவிதை நயத்துடன் வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார். கள்ளிக்காட்டைப் பார்த்தே கவிதை வடித்த இவருக்கு, அழகும் அமைதியும் நிறைந்த ஈஷாவைப் பார்த்தால் கவிதை வராமல் இருக்குமா என்ன?!

Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?



          



Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை. எப்படி என்று பார்ப்போம்.

முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன்.
நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.

எப்படி சம்பாதிப்பது? 

Step – 1
ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.

Step – 2
இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால் ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள்.
ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்”

Step – 3
இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.

Step – 4
இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும்.
இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.

Step – 5
முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.

Step – 6
உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.

அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.
அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form
இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.

இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.
Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது.

இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும்.
இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்,
Overlay in-video ads - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்
TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ
நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.

எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம் ? 

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.

கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம்.

ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது.

Wednesday 8 January 2014

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்...!


சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்...

"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!

ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே....


Tuesday 7 January 2014

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!



உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா? உண்மை நிலவரத்தை அறிய "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை" ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க மொபைல் போனை எடுங்க அதுல கீழ சொல்ற நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். அனுப்புங்க அவ்வளவுதான் மேட்டர் ஓவர்:

எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டிய தொலைபேசி எண்: 9789006492, 9789005450, இந்த 2 நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். பண்ணுங்க:

[PDS] ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [மாவட்டக்குறியீடு] அப்பறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [கடை எண்]. இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீங்கன்னா உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டிலேயே இருக்கும். (படத்தைப் பார்க்கவும்)

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?



1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

- சட்டபஞ்சாயத்துஇயக்கம்

மரத்தின் மதிப்பு... ரூ.5 கோடி..! தெரியுமா?

மரத்தின் மதிப்பு... ரூ.5 கோடி..!



ஒரு மனிதன்
ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள்
அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின்
விலை 700 ரூபாய்.,
மூன்று சிலிண்டரின்விலை2100
ரூபாய்.,

ஒரு வருடத்திற்கு 7,66,000
ரூபாய்க்கு மேல்
போகிறது. ,ஒரு மனிதனின்
சராசரி ஆயுள் காலம் 65 வருடம்
என்றால் 5
கோடி ரூபாய்க்கு மேல்
எட்டுகிறது.

இவ்வளவு விலையுயர்ந்த,
மதிப்பு மிகுந்த
சுவாசக்காற்றை நமக்காக
இலவசமாக மரங்கள்
தருகிறது...அப்படி என்றால் நாம்
மரங்களுக்கு எந்த
அளவிற்கு மரியாதை கொடுக்க
வேண்டும்., மரங்கள்,
இயற்கை மனிதனுக்கு தந்த
பொக்கிஷம்....,

இனியேனும் மரங்கள் என்னும்
அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல்
தடுத்து காக்க
உறுதி எடுப்போம்.

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!! ???

உங்களுடைய Facebook Profile க்கு வந்து 
உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!! ???




நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். 

இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை
பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து
உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும்.

அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.

அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும்,
இப்போது Search Bar Open ஆகும்.

அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.

இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது
சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?

புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும் இதுமாதிரி [ www.facebook.com/1000011345400] இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்.......

Friday 3 January 2014

பத்தே நிமிடங்களில் உங்கள் எந்த பாஸ் வோர்ட்டையும் திருடலாம். எப்படி?



/ To Keep your Online accounts safe /

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய பாதுகாப்பை தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு,மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.

பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில்123456ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாகபயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?


இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.





6 எழுத்துக்கள்


:


சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10மணி நேரம்+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்






7 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்+ பெரிய எழுத்துடன்(Upper Case) : 23 நாட்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்


8 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்


9 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்