Wednesday 15 October 2014

பிளாஸ்டிக்கை விட பன்மடங்கு சுற்று சூழலை கெடுக்கும் தெர்மோக்கோல் !!! ஒரு விழிப்புணர்வு பார்வை…!!!



 Like us on: www.facebook.com/Maduramozhivu
இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்… இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது.

இதுவும் ஒரு பாலிமர் தான்…பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை… PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.

இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.

முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..
நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.

மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்…இவை பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு …. மக்கும் தன்மையே கிடையாது…

ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்…இவை அனைத்தும் பூமிக்கு கேடு…

வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை…இந்த விஷயத்தில்
அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்…இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக செய்கிறார்கள்…இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி
செய்யப்பட்டவையே…

இவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???

1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.

2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்…இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர
பயன் தரும் பொருட்கள் செய்து…பணம் ஈட்டலாம்…

3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்…

4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல்…
வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்…(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)

5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ,,
அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.

6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள்
வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும்.

8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

9.நாமே ஒரு புனல் போன்று தகரத்தில் செய்து அதில் கரி கொண்டு நிரப்பி
அதனுள் இதை எரிய விடலாம்…(கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால்)
(பார்க்க படம்.)

10.மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்க்-களுக்கு சென்று பார்க்கவும்…

http://en.wikipedia.org/wiki/Polystyrene

http://www.answers.com/topic/polystyrene

http://www.youtube.com/watch?v=hvHuX32_–g

http://www.polystyrenepackaging.co.za/polystyrenerecycling.htm

பொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் … பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்…ஆனால் இந்த தெர்மொகோல் பூமியில் ஒரு போர்வை போல்,,,படர்ந்து நம் இயற்க்கை அன்னையை அழித்துக்கொண்டிருக்கிறது...இதை படிக்கும் அன்பர்கள்…சற்றே சிந்தித்து…இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்…

 Like us on: www.facebook.com/Maduramozhivu

தமிழக அறிவாளிகளுக்கு ஒரு சவால்..!!!



 Like us on: www.facebook.com/Maduramozhivu
எதிர்வரும் காலத்திற்கான ஒரு அவசியமான தகவல் நண்பர்களே..படித்துவிட்டு பகிருங்கள்..!!

இதுவும் ஒரு புரட்சியே!
இயற்கை புரட்சி!

நம் கையில் பழத்தை வைத்துகொண்டு (இயற்கை எரிவாயு), ஏன் அடுத்த நாட்டிடம் ஏன் கையேந்த வேண்டும்(கச்சா எண்ணை)

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை: (Rs)75.00 ரூபாய்: இயற்கை எறிவாயு (எத்தனால்) தயாரித்தால் -1 லிட்டர் 13.00ரூபாய்

எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும்.டாலரின் மதிப்பு ரூபாய் விட குறையும்!!!

ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம்.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. பெட்ரோலுடன் 24 சதவீதம் எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 சதவிதமும், பெட்ரோல் 15 சதவீதமும் கலந்து பயன்படுத்தலாம்.

எத்தனால் செய்யும் முறை!!

எத்தனால் என்பது – விவசாயப் பொருட்களிலிருந்து
தயாரிக்கப்படும் – எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய,ஆக்சிஜனை உள்ளடக்கிய,ஒரு நிறமற்ற திரவம். (CH3CH2OH )

இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை
பயன்படுத்தும் போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புறசூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.

ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது,கரும் புகை வெளிப்பாடு குறைந்து,ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும்பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன் 85 % எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை கட்டாயமாக்கி இருக்கிறது.பிரேசிலில்1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்டஅனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்துபயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்
பட்டிருக்கின்றன.

நம்ம கடிச்சி துப்புற கரும்பு சக்கையிலருந்தும், அப்பறம் சோளத்தை எடுத்துட்டு தூக்கிப்போடற கதிரு கச்சையிலிருந்தும் இந்த பெட்ரோல் எரி பொருள் தயாரிக்கலாம்

கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,

அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்றஎரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் -உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும்.

இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்டகரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் – சர்க்கரை விலை கணிசமாக குறையும்.

கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும்.இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு
வேலை கிடைக்கும்.

ஒரு கேலன் என்பது மூன்றரை லிட்டருக்குச் சமம். ஒரு கேலன் எத்தனால் தயாரிக்க 40 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகிறது
இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால்,

பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ.
தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது.

உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது…

 Like us on: www.facebook.com/Maduramozhivu