Monday 30 September 2013

தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை!!!



கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது .. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .. 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
johnson baby oil, amla hair oil,
clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.
தோல் வறண்டு போகும் 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 
2.
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் 
3.
அரிப்பு வரும் ..
4.
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள் 

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Get VOTER ID card online


Now you can Get voter id card threw online... visit... http://www.eci-citizenservices.nic.in/

Wednesday 25 September 2013

how to download aadhaar card


Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்




தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..

Monday 23 September 2013

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

mind_body_connection1நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

psychic
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

ndetunnel
படம்:கூகுள்
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

ufoயு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

ghost3813xநம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuitionநம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

11 இலட்சம் திரைப்படங்களை ஒரே சி.டியில் சேமிக்கக் கூடிய புதிய தொழில் நுட்பம்!

ஆப்டிகல் விஞ்ஞானத்தை 1873 ஆம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை. அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் கூ தலைமையில் பொறியியள் விஞ்ஞானிகள் ஒரு புது வகை வட்டை கண்டுபிடித்திருக்கின்றனர். இது சிடி / டிவிடி / ப்ளூ ரே தாண்டி ஒரு பெட்டாபைட் (10,48,576 கிகா பைட்) கொள்ளளவு கொண்டது. இந்த டிஸ்கின் மூலம் 11 லட்சம் டிவிடி குவாலிட்டி திரைப்படங்களை சேமிக்கவோ (1ஜிபி குறைவாக ஒரு எம்பி 4 திரைப்பட அளவின்படி கணக்கிடபட்டது) அல்லது 10 வருடம் 6 மாத ஹெச்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அல்லது 18 வருட எஸ் டி தொலைக்காட்சியியை இந்த டிஸ்கில் அடக்கி விடலாம்.
இது ஃபோக்கல் பாயின்ட் எனப்படும் லேசரின் நுணுக்கம் ஒரு மனிதனின் முடியை பத்தாயிரமாய் வகுந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு மிக துல்லியமான ஃபோக்கல் பாயின்ட் டெக்னாலஜி மூலம்தான் இந்த டிஸ்க் ரெடியாகி உள்ளது. மேலும் இது 100 X வேகம் கொண்டது.
cd

Sunday 22 September 2013

ஒலி அறிவியலும், மந்திரங்களும், எந்திரங்களும்..

பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம். கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மந்திரங்களின் மாற்றாக கருதப்படும். அதைப்பற்றி அடுத்த பதிவில்…

இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்? ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார். அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.

அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே. TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி !!!

விடை தேடுவோம். முடிந்தவரை எல்லாரும் இப்பதிவை பகிர்ந்து எல்லோருக்கும் நமது வழிபாட்டு முறைகளின் அறிவியலை உணர்த்தி பயன்பெறுவோம்.



Saturday 21 September 2013

நம் முன்னோர்களின் கட்டடிடகலை



நம் முன்னோர்களின் கட்டடிடகலைக்கு இதுவும் ஒரு சான்று...!

இது நம்ம இந்தியாவில தாங்க, ராஜஸ்தானில் உள்ள அபனேரி என்ற கிராமத்தில் 1200 வருசத்துக்கு முன்பு கட்டிய தான் இந்த "சான்ட் ஃபோரி" என்னும் படிக்கட்டு கிணறு....

இந்த கிணறு 3500 படிகளை கொண்டது.


APPLE iOS 7- ல் தமிழ் தட்டச்சுப் பலகை






APPLE நிறுவனம் தனது புதிய பதிப்பான iOS 7- ல் தமிழ் தட்டச்சுப் பலகையை இணைத்துள்ளது. என்னவென்று சொல்வது, ஏற்ப்பட்டிருக்கும் மகிழ்ச்சியை..,

இது தமிழுக்கு கிடைத்த பெருமையாக கருதவில்லை., அந்த நிறுவனம் தான் உலகின் தொன்மையான மொழியை தமது தயாரிப்பில் பயன்படுத்தியதற்கு பெருமை படவேண்டும்... 

Friday 20 September 2013

தமிழின் பெருமை ஆயிரம் ரூபாயில் தஞ்சை பெரிய கோவில்



தமிழின் பெருமை ஆயிரம் ரூபாயில் தஞ்சை பெரிய கோவில்....

மின்சார சிக்கனம் செய்ய...!





மின்சார சிக்கனம் செய்ய வீட்டு உபயோக மின்சார சாதனங்களை எவ்வளவு மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு யூனிட் ஆகும் எனும் தகவல்..!

Thursday 19 September 2013

ஒரு பயனுள்ள செய்தி




சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்:

தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச் சான்றிதழ்களை பெற முடியும்.

இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதழ்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்று கொள்ளப்படும்.

இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் கண்ட இணையமுகவரிக்குச் சென்று "Register Citizen" என்பதை கிளிக் செய்து உங்களுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழு விபரமும் ரிஜிஸ்டர் ஆகி விடும். பின்னர் உங்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற்படுத்தப்பட்டோர்க்கான கல்வி உதவித்தொகை கிடைக்க வழி செய்யப்படும்.
பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் வழி வகை உண்டு.

இணைய முகவரி http://edistrict.tn.gov.in/ 

Tuesday 17 September 2013

அரிய நிழற்படம்.




காலங்கள் பல கடந்தும் கம்பீரமாய் நிற்கும் மீனாட்சி அம்மன் கோவில். 

அரிய நிழற்படம்.
1686 முதல், 1792, 1879, 1998 வரை எடுத்த நிழற் படங்கள்

Monday 16 September 2013

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:

                                     

~~~~~~~

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

~~Browser~~

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

1. Chrome - http://goo.gl/j11of
2. Firefox - http://goo.gl/7ICv2

~~Antivirus~~

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

1. Avast - http://goo.gl/8Br5g
2. Microsoft Security Essentials - http://goo.gl/YDpJ7

~~File Compression Software~~

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. 7-Zip - http://goo.gl/CHqRw
2. Zip2Fix - http://goo.gl/y1m9E

~~Image/Graphics editor, paint program, and picture organizer~~

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.

1. Gimpshop - http://goo.gl/UK9s
2. Paint.NET - http://goo.gl/59FB
3. IrfanView - http://goo.gl/59FB
4. Inkscape - http://goo.gl/q6Sh

~~Multimedia~~

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. VLC media player - http://goo.gl/oRNqK
2. KM Player - http://goo.gl/VMzX7
3. Audacity – Free Audio Editor - http://goo.gl/ARs0
4. Avidemux – Free Video Editor - http://goo.gl/Uzr2n
5. DVD Video Soft - http://goo.gl/w6Hhj
6. Free Make Video Converter - http://goo.gl/Hyb9J

~~~Office Tools~~

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.

1. MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் -http://goo.gl/XuiAM

எச்சரிக்கை தகவல்..!

             

நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும். ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது. கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள். பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்! மேலும் தவலுக்கு இந்த விடியோ கிளிப்பை பார்க்கவும்.http://www.youtube.com/watch?v=Pn0pYLfF8rQ

Saturday 14 September 2013

முகநூலை தூக்கி எறியுங்கள், விக்கிப்பீடியாவில் எழுதுங்கள்.



முகநூல் பல புதிய தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது.  இலக்கிய நடையில் எழுதினால் தான் ஒருவர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக எழுதுவோர் அனைவரும் எழுத்தாளரே  எனும் சூழ்நிலை உள்ளது.
நிகழ்காலத்தில் அனைவருக்கும் பொதுவான அறிவுக் களஞ்சியமாக விளங்கும் நமது Wikipediaவில் உலகில் உள்ள பலரும் தத்தம் மொழியில் கட்டுரைகளை எழுதி வருகின்றார்கள்.
அதிக கட்டுரைகள் அடிப்படையில்.,
ஆங்கிலம், பிரஞ்சு, டச்சு மொழிகள் முதல் இடத்திலும்.
ஹிந்தி , சீனம், அரபி போன்ற மொழிகள் இரண்டாம் இடத்திலும்,
மலையாளம், மணிப்பூரி, கன்னடா, தமிழ் என நான்காம் இடத்திலும் மொழிகள் உள்ளன.
தமிழில் எழுதும் அன்பர்களை பாராட்டும் விதத்தில் ஒரு போட்டியும் நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரை எழுதும் அன்பரின் பெயர் மற்றும் புகைப்படம் தமிழ் விக்கி முதல் பக்கத்தில் இடம் பெரும்.
ஏற்கனவே உள்ள கட்டுரையை மேம்படுத்தலாம் அல்லது புதிய தலைப்பிலும் எழுதலாம். முகநூல் தளத்தில் தினமும் மணிக்கணக்கில் நேரம் செலவழிக்கும் நாம், ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு மணிநேரம் ஒதுக்கினால் ஒரு கட்டுரையை எழுதிவிட முடியும். நாம் அனைவரும் மாதத்திற்கு ஒரு கட்டுரையாவது Wikipediaவில் எழுத வேண்டும் என முடிவு செய்து எழுதுவோம் இணைந்து தமிழ் வளர்ப்போம்.

Friday 13 September 2013

தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல.

மிழ் வெறும் மொழி மட்டும் அல்ல. உலகில் தேடப்படும் பல கேள்விகளின் பதில்கள் அடங்கி உள்ள, இடமாகவும் தமிழ் உள்ளது.

தமிழில் கணிதம், அறிவியல், அரசியல் தீர்வு, புவி பற்றிய, இன்னும் பல அரிய, அதிசய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. மனிதன் வரலாறு , தாவரம் தோன்றிய வரலாறு, உயிரினம் தோன்றிய வரலாறு, புவி தோன்றிய வரலாறு, மொழி தோன்றிய வரலாறு, இன்னும் பல அடங்கியது தமிழ்.

இந்தியரும், வெளிநாட்டவரும் உறிமை கொண்டாடும் தற்போதைய கணடுபிடிப்புகள் அனைத்தும், தமிழர் அயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து, பயன் படுத்தப்பட்டவையே ஆகும்.

Wednesday 11 September 2013

இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்

கூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ளாத கூகிள் நிறுவனம் தற்போது தான் விழித்துக் கொண்டு பல வசதிகளை இந்தியாவில் கொண்டு வர ஆரம்பத்திருக்கிறது.


கடந்த ஆறு மாதங்களாக கூகிள் தனது தொழில்நுட்ப சேவைகளை இந்தியாவிற்கு வழங்கி இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் அழுத்தமாக கால் பதிக்க முயற்சிக்கிறது. இதனை சில தகவல்களோடு பார்ப்போம்.

1. செப்டம்பர் 5, 2012 – கூகிள் மேப்ஸ் சேவையை Turn by Turn மற்றும் Voice Navigation வசதிகளோடு முழுமையாக வழங்கியது.

2. அக்டோபர் 19, 2012 – Google Play Store இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இந்தியர்களும் கொடுத்து பணம் சம்பாதிக்க வசதியைத் தந்தது.

3. அக்டோபர் 26, 2012 – Google Play இல் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களுக்கான மதிப்பை ருபாயில் கொண்டு வந்தது. இதற்கு முன் டாலரில் இருந்தது.

4. பிப்ரவரி 7, 2013 – Google Mapathon போட்டி மூலமாக கூகிள் மேப்ஸில் இந்தியாவிலிருக்கும் சேர்க்கப்படாத புதிய இடங்களை அதிகமாகச் சேர்ப்பவருக்கு பரிசுகள் தரப்படுவதாக அறிவித்தது.

5. பிப்ரவரி 27, 2013 – ஆண்ட்ராய்டில் ஹிந்தி மொழியைத் தட்டச்சு செய்வதற்கான பயன்பாட்டை வெளியிட்ட்து. Google Hindi Input

6. பிப்ரவரி 28, 2013 – Google Play இல் புத்தகங்களை வாங்கும் வசதியான Google Play Books ஐக் கொண்டு வந்தது. 
Google Business steps in India - Google Play Books

7. மார்ச் 26, 2013 – முதன் முறையாக Google Play Store மூலமாக Nexus 7 16 GB டேப்ளட் கணிணியை அறிமுகம் செய்தது. இதான் கூகிள் இந்தியாவில் ஆன்லைனில் விற்கும் முதல் ஹார்ட்வேர் பொருளாகும். Read about Nexus 7
Google Business steps in India - Nexus 7

8. மார்ச் 28, 2013 – இப்போது Google Play மூலமாக திரைப்படங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கும் வசதியான Google Play Movies ஐக் கொண்டு வந்துள்ளது.
Google Business steps in India - Google Play Movies

9. மார்ச் 28, 2013 - ஆண்ட்ராய்டுக்கான Google Translator பயன்பாட்டை இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக்கூடிய வகையிலான Offline Google Translate வசதியைக் கொண்டு வந்துள்ளது. இதில் இந்தி, தமிழ் போன்ற 50 மொழிகளில் மொழிபெயர்க்கலாம்.

மேலும் கூகிள் இந்தியாவில் Google Play Music, TV and Magazines போன்ற சேவைகளையும் விரைவில் கொண்டு வரலாம். அதே போன்று Nexus 7 தவிர Nexus 4 மற்றும் Nexus 10 போன்ற டேப்ளட் கணிணிகளையும் ஆன்லைனில் கொண்டு வரலாம்.

கூகிள் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து கொண்டு வரும் இந்த வசதிகள் எல்லாமே இந்தியப் பயனாளர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதமே.

ஆனால் இந்திய மக்களில் அதிகம் பேரிடம் Credit Cards இல்லை; மேலும் அதை இணையத்தில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால் மொபைல் நிறுவனங்களோடு கூகிள் கை கோர்த்து அதன் மூலம் கட்டணங்களை வசூலித்தால் எளிதாகவே இருக்கும். மொபைல் போன் பில்லாகவோ அல்லது Mobile Balance இல் கழித்துக் கொள்வதாக கூட வைத்துக் கொள்ளாலாம். மக்களும் இந்த முறையில் நம்பிக்கையாக வாங்குவார்கள். இந்த Operator Billing முறையையும் கூகிள் விரைவில் கொண்டு வரலாம்.