Wednesday 29 May 2013

கூகள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்


கூகள் எர்த் எனும் செயற்கைக்கோள் வழி புகைப்பட சேவையை கூகள் வழங்கி வருகிறது.
நாசா (நாராயண சாமி அல்ல) உதவியுடன் புவியின் கடந்த கால புகைப்படங்களை தொகுத்து அமேசான் காடு அழிக்கப்படுவதையும், நகரங்களில் கட்டிடங்கள் பெருகுவதையும், துபாயில் காதல் மீது பெரும் குடியிருப்பு கட்டப்படுவதையும் தொகுத்து வெளியிட்டுள்ளது.
 
 

உலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ


உலகின் மிக வேகமாக ஓடக் கூடிய ரோபோ Cheetah என்னும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். சிறுத்தை உருவம் கொண்ட தலையின்றிய குறித்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 18 மைல்கள் பயணிக்கும்.
அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் ஆராய்ச்சி திட்ட முகவர் நிலையத்தினால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதனை விட மிக வேகமாக ஓடக் கூடிய தொழில்நுட்பம் இந்த ரோபோவில் இணைக்கப்பட்டுள்ளதால் யுத்த களத்தில் மிக வேகமாக எதிரியை துரத்தி பிடிப்பதற்கும், தாக்குவதற்கும் என களத்தில் விட்டு பரிசோதிக்க போவதாக இதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவின் சோதனை வீடியோ கீழே உள்ளது கண்டு மகிழுங்கள்.

Bootable CD/DVD உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட எளிது.


1. உங்களிடம் உள்ள ஒரு CD/DVD யை எவ்வாறு ஒரு ISO/NRG இமேஜ் கோப்பாக காப்பி செய்து வைப்பது.
2. நீங்கள் ஏற்கனவே ஒரு விண்டோஸ் CDயை உங்களின் கணினியில் காப்பி செய்து வைத்து இருந்தால் அந்த கோப்புகளை எவ்வாறு ஒரு ISO இமேஜ் கோப்பாக மாற்றுவது.
3. ISO கோப்புகலாக உள்ள உங்களின் விண்டோஸ் பதிப்பை எவ்வாறு ஒரு Bootable CD/DVD யாக எழுதுவது என இந்த வீடியொவில் சொல்லி உள்ளேன். உங்களின் கேள்விகளை இங்கே கேட்கவும்.
http://sourceforge.net/projects/iso-creator-cs/

உங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற


இது TECH தமிழில் எனது முதல் பதிவு. உங்களுக்கு சிறந்த மற்றும் எளிய பயிற்சியை தொடர்ந்து வழங்க இருக்கிறேன்.
இந்தப் பதிவில்., உங்களின் முகத்தை Terminator Arnold போல மற்றும் முறையை இங்கே விளக்கியுள்ளேன்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

லேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு (latest Technology Machine)

pickpocket
(ATM Card, Credit card & passport stealing Machine). ரஜினி படத்துல எல்லாவற்றையும் காட்டும் கண்ணாடின்னு வருமே அந்த கதையால இருக்கு. ATM கார்டு Credit கார்டுனு எல்லாத்தையும் களவாடும் மெசினு இருக்காமே. இதுல என்ன முக்கியமானதுனு பாத்திங்கன்னா , களவாடுரத கண்டு பிடிக்கிறது கஷ்டம். அது எப்படின்னு கேட்கரிங்களா. வெற்றிலையில் மை போட்டு தேடுவான்களே அந்த மாதிரி. உங்கள தொடாமலையே , உங்க ATM கார்டு Credit கார்டுனு ….அடடா ஒன்னு சொல்ல மறந்துட்டனே உங்க passport டையும் சேர்த்து அதுல உள்ள விவரங்கள , களவாடும்கரது தான் விசேசம் . இத எப்படி பண்றாங்கன்னு நீங்களே வீடியோ பார்த்து தெரிஞ்சுகோங்க….ம் ம் லேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு 

Adsense Publisher Toolbar

இணையத்தில் இணையதளங்கள் மூலம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும்   Google Adsense விளம்பர சேவையே பலரும் விரும்புகின்றனர். நேர்மையாலும், பணம் அதிகமாக கொடுப்பதாலும் இன்றும் இணையத்தில் சம்பாதிக்க அனைவரின் விருப்பம் Adsense தான். தற்பொழுது Google-ன் Adsense விளம்பரம் மூலம் லட்சக்கணக்கான இணையதளங்கள் வருமானம் ஈட்டி வருகின்றன.
AdSense உபயோகிப்பவர்கள் தங்களின் status பார்க்க ஒவ்வொரு தடவையும் AdSense தளத்தின் login செய்து பார்க்க வேண்டும். Blogger கணக்கு ஒரு E-mail ID-ல் இருக்கும். AdSense ஒரு ID-ல் இருக்கும். ஒவ்வொரு முறையும் signout செய்து வேறொரு ID-க்கு சென்று பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க Google நிறுவனம் AdSense உபயோகிப்பவர்களுக்கு ஒரு புதிய Toolbar அறிமுக படுத்தி உள்ளது.


Today Earnings, Yesterday Earnings, Current month Earnings மற்றும் Last month Earnings என அனைத்தையும் AdSense தளத்திற்கு செல்லாமலே பார்த்து கொள்ளலாம். இவைகள் மட்டுமின்றி இது வரை நீங்கள் AdSense மூலம் சம்பாதித்த மொத்த தொகை மற்றும் Top Channel ஆகியவையும் இந்த நீட்சியின் உதவியுடன் காணலாம்.
நீட்சியை இணைப்பது எப்படி:
  • முதலில் இந்த லிங்கில் Adsense Publisher Toolbar சென்று Chrome நீட்சியை download செய்து கொள்ளுங்கள்.
  • இந்த நீட்சி உங்கள் browser-ல் install ஆகியவுடன் அதை click செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும். அதில் Allow என்பதை click செய்யவும்.
அடுத்து வரும் window-வில் உங்களின் AdSense ID தேர்வு செய்து கொண்டால் இறுதியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்.
அவ்வளவு தான் இனி எந்த இடத்தில இருந்தும் எப்பொழுது வேண்டுமானலும் இந்த நீட்சியில் click செய்து AdSense status பார்த்து கொள்ளலாம்.

இணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது?

நம்மில் பலருக்கும் இணையம் பயன்படுத்துவது ஒரு அன்றாடச் செயல்.  ஒரு காலத்தில் YouTube / Orkut / YahooChat என்று இருந்த இணையம் பற்பல புதிய முறை தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தின் பல சேவைகள் நம் சிந்தனையை திசை திருப்பும் விசயங்களாகவே உள்ளன. கவனம் சிதறாமல் ஒரு செயலை இணைய உதவியுடன் செய்வது வர வர மிகக் கடினமாகவே இருக்கிறது.
Facebook , Twitter , Email ஆகியவற்றை ஒரு நாளில் இவ்வளவு நேரம் தான் பயன்படுத்த வேண்டும் என நம்மில் பலராலும் நேர நிர்ணயம் செய்ய இயலவில்லை.
கணினி முன் தவம் இருப்பதை விட்டு பல புதிய விசயங்களை நிகழுலகில் கற்கும் போது நம் மூளைக்குள் பல புதிய நியுரான் இணைப்புகள் ஏற்படுமாம்.

Saturday 25 May 2013

tamilin sirappu

                                        
ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அறுவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்காக போராட வேண்டாம் வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய் மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விடயமா? தமிழின் சிறப்புகளை இங்கே உணர்த்துவதே எமது நோக்கம். தமிழின் சில சிறப்புகளை இங்கே காணலாம்.

தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும் விட மிக எளிமையானது. ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தை பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட மொழி, ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி, ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி. அதற்கு ஒரு சில சான்றுகளை இங்கே காணலாம்.

ஆங்கிலத்தில் 'BOOK' என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள் B - பி, o - ஒ, o - ஒ, k - கே. அதாவாது பிஓஓகே என்ற எழுத்துக் கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும்.

அடுத்ததாக 'ARAVAIND' என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம் ஆனால் 'ANGEL' என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே 'A' என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப 'அ' என்றும் 'ஏ' என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.

ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. ‘BEE’ என்ற சொல்லில் இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது, அதே சமையம் ‘LARGE’ என்ற சொல்லில் குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ‘BOOK’ என்ற சொல்லில் இரு குறில்கள் வந்தாலும் அது குறிலாகவே நிலைப்பெறுகிறது.

வெறும் 26 எழுத்துக்களே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால் தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. ஆங்கில மொழியின் உயிர் எழுத்துக்கள் வெறும் 5 எழுத்துக்களே ‘A, E, I, O, U’ மீதம் உள்ள 21 எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்கள் எனக் கொள்ளலாம். ஆனால் இவை மட்டும் ஒரு மொழியின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. ஆங்கிலத்தில் மெய் எழுத்துக்களே கிடையாது, ஆனாலும் ஒரு சில நேரங்களில் ‘Consonents’ என்று சொல்லப்படும் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களாக தோன்றும். உதாரணமாக “PARK” என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது ‘R’ மற்றும் ‘K’ என்ற எழுத்துக்கள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.

ஆக தோழர்களே இவ்வளவு குழப்பங்களும், குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்கு சிறப்பானதா?, எளிதானதா?. உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும். சிந்தியுங்கள். மீண்டும் கேட்டுக்கொள்கிறோம், அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளமாய்த் தமிழ்!


Agathiyar in ariviyalgal

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். 
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

- பசுமை நண்பர்கள்